மீண்டும் கட்சி தாவினாரா வடிவேல் சுரேஸ்..? புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹரின் பெர்னாண்டோ..
ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் கட்சி தாவியுள்ள தாகவும், அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில்,
அவ்வாறு வடிவேல் சுரேஸ் கட்சி தாவவில்லை. அவர் அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது ருவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் மேலும் கூறியு ள்ளதாவது,
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக கையெழுத்திட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வசந்த சேனாநாயக்க கையெழுத்திடவில்லை எனவும்இ அவரது கையெழுத்தில்லாமல் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
வசந்த சேனாநாயக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டார். வடிவேல் சுரேஷூம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
https://twitter.com/fernandoharin/status/1065210168500264961