மிளகாய் தூள் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் தலமையத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
மிளகாய் தூள் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் தலமையத்தில் முறைப்பாடு..

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மஹிந்த அணியினரால் நடத்தப்பட்ட மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

“இது மிகவும் கவலைக்குரிய சம்பவம். மிளகாய்த் தூள் எனது முகத்திலும் வீசப்பட்டது. எனது கண்களை மூடுவதற்குக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. எவ்வளவு வேதனையை அனுபவித்தேன் என்பதை தெரிவிக்கக் கூட என்னால் முடியவில்லை. 

இந்த நாட்டில் ஊழல் மற்றும் மோசடியை முடிவுக்குக் கொண்டுவருவதாக நான் உறுதிமொழி எடுத்துள்ளேன். நாடாளுமன்றம் மதிப்புக்குரிய இடம். அதன் காரணமாகவே நான் முறைப்பாட்டைப் பதிவு செய்கின்றேன். தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நான் நம்புகின்றேன்” 

என்று காமினி ஜயவிக்கிரம பெரேரா எம்.பி. தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு