கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் அல்லைப்பிட்டியில் இளைஞன் மீட்பு!!

ஆசிரியர் - Editor I
கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் அல்லைப்பிட்டியில் இளைஞன் மீட்பு!!

யாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து அறுக்­கப்­பட்டு வீதி­யில் உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த இளை­ஞர் வீதி­யால் சென்­ற­வர்­க­ளால் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

அல்­லைப்­பிட்­டி­யில் உள்ள வாடி வீட்­டுக்கு அண்­மை­யில் ஓர் இளை­ஞன் கழுத்து அறுக்­கப்­பட்ட நிலை­யில் வீதி­யோ­ரம் வீழ்ந்து கிடந்­துள்­ளார். 

அந்த வீதி­யால் பய­ணித்த முச்­சக்­கர வண்­டிச் சாரதி அதை அவ­தா­னித்­துள்­ளார். வீதி­யால் வந்த மற்­றொரு முச்­சக்­கர வண்­டிச் சார­தி­யும் இணைந்து அவ­சர நோயா­ளர் காவு வண்­டிச் சேவைக்கு அறி­வித்­துள்­ள­னர். 

சம்­பவ இடத்­துக்கு வந்த நோயா­ளர் காவு வண்டி இளை­ஞரை மீட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­தது.

சம்­பவ இடத்­தில் ஒரு சோடி செருப்­புக்­கள், ஈருளி என்­பன திக்­குத் திக்­காக் கிடந்­துள்­ளன. 

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக ஊர்­கா­வற்­று­றைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.  சம்­ப­வத்­துக்­கான கார­ணம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு