நாயை அடித்து கொலை செய்துவிட்டு அதனை பொது இடத்தில் வீசியவருக்கு தகுந்த பாடம் கற்பித்த யாழ்.மாநகரசபை..
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியின் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் வசிக்கும் ஒருவர் நாயை அடித்துக் கொலை செய்துவிட்டு வீதியில் உள்ள குப்பைகளுடன் போட்ட இழிசெயலை கண்டுகொண்ட ஊழியர்கள் நாயை மீண்டும் வீட்டிற்கே தூக்கிச் செல்ல வைத்தனர்.
மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள திருநெல்வேலிப் பகுதியில் கடந்ந வாரம் ஒருவர் தனது வீட்டு வளவிற்குள் பிரவேசித்த தெரு நாயை அடித்துக் கொலை செய்துள்ளார். அவ்வாறு கொல்லப்பட்ட நாயை ஓர் பையில் பொதி செய்து மாநகர சபையினால் கழிவு சேகரிக்கும் இடத்தில் வீசி சென்றுள்ளார்.
இரு தினங்களின் பின்னர் கழிவு அகற்ற சென்ற மாநகர சபை ஊழியர்கள் அதனை அவதானித்து அயலில் ஆராய்ந்தவேளையில் குறித்த செயலினை மேற்கொண்டவர் இனம்காணப்பட்டார். இதனையடுத்து சுகாதார மேற்பார்வையாளர் ஒருவர் குறித்த வீட்டின் உரிமையாளரை அனுகி
அதனை உரிய முறையில் அகற்றுமாறு கோரியபோது அச் செயலை தான் மேற்கொள்ளவில்லை என வீட்டு உரிமையாளர் மறுத்து விட்டார். இந்த நிலையில் மேலும் ஆராய்ந்த நிலையில் உயிரிழந்த நாய் குறித்த வீட்டிற்குள் செல்வது முதல் அடித்துக்கொள்வது மற்றும் பொதி செய்து எடுத்துச் செல்வது
வரையான சம்பவங்கள் அயலில் உள்ள ஓர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி கமராவில் ஒளிப்பதிவாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குறித்த வீடியோவினை காண்பித்து உறுதி செய்த நிலையில் வீதியில் எறிந்த நாயினை இரண்டாம் நாள் மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று
புதைத்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்மெற்றுள்ளது.