இலங்கை நாடாளுமன்றில் அபாயகரமான ஆயுதம் கண்டுபிடிப்பு.. நாடாளுமன்றில் மிளகாய்துாள் வீசியதை கேலி செய்த சா்வதேச ஊடகம்..
நாடாளுமன்ற குழப்பத்தின் போது மிளகாள் பொடியே ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற குழப்பத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் இலங்கை முழுவதும் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடும் போதே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் போது திடீரென 45 நிமிடங்களுக்கு பொலிஸார் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போது, பொலிஸாரை துறத்தியடிப்பதற்கு தற்போதைய ஆளும் தரப்பினர் மிளகாய் பொடியை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் புத்தகங்கள் நாட்காலிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.