யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ….
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(17-11-2018) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி,நாளை காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை காரைநகர்,காரைநகர் இறங்கு துறை, காரைநகர் கடற்படை முகாம், சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, வலந்தலை, வியாவில், கருங்காலி, ஊரி, களபூமி, தோப்புக்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.