ஹெறோயின் போதைப் பொருளுடன் இளைஞா் கைது..
யாழ்.நாவற்குழி பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழில் இருந்து போதை பொருளை வாங்கிக்கொண்டு பேருந்தில் வந்து நாவற்குழி பகுதியில் இறங்கிய வேளை சாவகச்சேரி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிபடையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் நாவற்குழி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் எனவும் , அவரிடம் இருந்து 250 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.