காடையா்களாக மாறிய மஹிந்த அணியினா்.. வாய்பாா்த்துக் கொண்டிருந்த ஐ.தே.கட்சியினா்.

ஆசிரியர் - Editor I
காடையா்களாக மாறிய மஹிந்த அணியினா்.. வாய்பாா்த்துக் கொண்டிருந்த ஐ.தே.கட்சியினா்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியினர் இன்றும் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சபாநாகரின் ஆசனத்தை சுற்றியுள்ளதுடன், சபாநாயகர் ஆசனத்தில் அருந்திக பெர்னான்டோ அமர்ந்து பெரும் அடாவடியில் ஈடுபட்டுள்ளனா்.

இவர்களின் இந்த நடவடிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியினர் எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.  

நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியினரும் போராட்டத்தில் இடுபட்டு இருந்தனர். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் அமைதியாக இருக்கின்றனர்.

ஒரு பக்கம் ஆர்ப்பாட்டமும் மறு பக்கம் அமைதியும் என இன்றைய நாடாளுமன்றம் காட்சியளிக்கின்றது.

நேற்றைய தினம் இடம்பெற்ற பெரும் குழப்பத்திற்குப்பின் இன்று 1.30க்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மிக நீண்ட நேரம் உத்தியோகப்பூர்வமான நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகாத நிலையில், மஹிந்தஅணியினர் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். 

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவை கைது செய்யுமாறும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு