பொலிஸாா் மீதும் தாக்குதல் நடாத்திய மஹிந்த தரப்பு.. பலா் காயம்.

ஆசிரியர் - Editor I
பொலிஸாா் மீதும் தாக்குதல் நடாத்திய மஹிந்த தரப்பு.. பலா் காயம்.

நாடாளுமன்றில் உருவான குழப்பங்களை தொடா்ந்து நாடாளுமன்றுக்குள் பொலிஸாா் களமிறக்கப்பட்டபோதும் பொலி ஸாா் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

எனினும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் மீது தண்ணீர் மற்றும் பல்வேறு பொருட்களை மஹிந்த தரப்பினர் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.30 வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

எனினும் மஹிந்த தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட குழப்பத்தினால் இன்றும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு