நாடாளுமன்றில் மிளகாய்துாள் வீச்சு..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றில் மிளகாய்துாள் வீச்சு..

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய் தூள் கரைசலை வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்தூள் கரைசல் வீசப்பட்ட புகைப்படங்களையும் திலகராஜா முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜே.வி.பி.யின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மீது இந்த மிளகாய் தூள் சரைசல் வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு