உச்சகட்ட பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு..
பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.
எனினும் வாக்ககெடுப்பு நடத்தவிடாமல் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை காலை 10.00 மணி வரை ஒத்தி வைத்தார்.