நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக 17 மனுக்கள், அதிர்கிறதாம் உச்ச நீதிமன்றம்..
இலங்கை அரச தலைவரின் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், சுமந்திரன், திலக் மாரப்பன ,ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் விரான் கொரயா ஆகியோர் அரசியலமைப்பு சட்ட நுணுக்கங்களை விளக்கி கடும் வாதம் புரிந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற 502 ஆம் இலக்க மன்று சட்ட நிபுணர்களால் நிரம்பியுள்ளதுடன் நீதிமன்ற வளாகம் உள்நாட்டு வெளிநாட்டு செய்தியாளர்களால் நிரம்பியுள்ளது.
நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின்னர் மன்று 15 நிமிடஙகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது மிண்டும் கூடியுள்ளது.