வவுனியா- இலுப்பை குளத்தில் வீதிக்கு வந்த 12 நீள முதலை..

ஆசிரியர் - Editor I
வவுனியா- இலுப்பை குளத்தில் வீதிக்கு வந்த 12 நீள முதலை..

வவுனியா - நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று காலை மக்கள் வீதியில் பயணித்த போது 12 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட அவ்விடத்தில் கூடிய போது குறித்த முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்துள்ளது.

இதனையடுத்து ஊர்மக்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த வவுனியா பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்துள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த முதலை மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் விடப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு