SuperTopAds

வெலிஓயா தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவின் பரப்பளவு என்ன? விழி பிதுங்கும் அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
வெலிஓயா தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவின் பரப்பளவு என்ன? விழி பிதுங்கும் அதிகாரிகள்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் நிலப்பரப்பு தொடர்பில் 5 பிரதேச செயலக தரவுகள் மட்டுமே வழங்கப்படும் நிலையில் வெலிஓயா பிரதேச செயலகம் தொடர்பான தகவல் தெரியாது என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டம் 2 ஆயிரத்து 617 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவினை உடையது. என இலங்கை நில அளவைத் திணைக்களம் கூறுகின்றது. அதனையே அத் திணைக்களத்தின் தகவல்களும் உறுதி செய்கின்றனர். 

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாகம் சார் பொறுப்பாக விளங்கும் மாவட்டச் செயலாளர் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ 5 பிரதேச செயலாளர் பிரிவு தொடர்பிலும் தகவல் தெரிவிக்கும் நிலையில்

 உத்தியோக பூர்வமற்ற ஆறாவது பிரதேச செயலாளர் பிரிவான வெலிஓயா என தற்போது அழைக்கப்படும் மணலாறுப் பிரதேசம் தொடர்பில் எதுவுமே தெரியவில்லை . எனப் பதிலளிக்கின்றனர்.

முல்லைத்தீவு  மாவட்டத்தின் வெலிஓயா தவிர்ந்த  5 பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்பரப்புக்கள் தொடர்பில் உத்தியோக பூர்வமான தரவுகளின் பிரகாரம் 

46 கிராம சேவகர் பிரிவுகளைக்கொண்ட கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவானது 728.6 ச.கிலோ மீற்றரும் , 

27 கிராம சேவகர் பிரிவினையுடைய  ஒட்டுசுட்டான் 618 ச.கிலோ மீற்றரும் ,

 19 கிராம சேவகர் பிரிவுகளையுடைய புதுக்குடியிருப்பு 350 சதுரக் கிலோ மீற்றரும் கொண்டுள்ளதோடு 

15 கிராம சேவகர் பிரிவினையுடைய மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு 494 ச.கிலோ மீற்றரும் 

20 கிராம சேவகர் பிரிவுகளையுடைய துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவானது 326.3 ச.கிலோ மீற்றர் பரப்பினை உடையது . என மாவட்டச் செயலாளர் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கின்றார்.

இதன் அடிப்படையில் மாவட்டத்தின் குறித்த 5 பிரதேச செயலாளர் பிரிவுகளும் 127 கிராம சேவகர் பிரிவுகளுடன் 2 ஆயிரத்து 519.9 சதுரக் கிலோ மீற்றர் பரப்பில் இயங்குவது உறுதி செய்யப்படுவதோடு 

மாவட்டத்தில்  உத்தியோகப் பற்று அற்ற நிலையில் இயங்கும் வெலிஓயாவில் 9 ஆயிரத்து 500 மக்கள் வாழ்வதாக கணக்கிடப்படும் 9 கிராம சேவகர் பிரிவிற்காக இங்கே 117.1 ஏக்கர் நிலம் விழுங்கப்பட்டுள்ளபோதிலும் 

குறித்த பிரதேச செயலகத்தின் நிலப்பு தொடர்பில் பிரதேச செயலாளரிடம் விபரம் கோரியுள்ளபோதிலும் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.