பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு, போதை மாத்திரைகளை கடத்திய கும்பல் கைது..
வவுனியா- ஓமந்தை பகுதியில் பெருமளவு போதை மாத்திரைகள் அடங்கிய பொதி ஒன்றினை நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஓமந்தை பொலிஸார் மீ ட்டுள்ளனர்.
கஞ்சா, ஹெரோயின் என்பன பொதி செய்யப்பட்ட நிலையில் கடந்த காலங்களில் மீட்கப்பட்டி ருந்த நிலையில் தற்போது போதைக் குளிசைகளும் மீட்கப்பட்டுள்ளன.
வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அபயவிக்கிரமவின் கீழ் இயங்கும், ஓமந்தைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் சில்வா தலைமையில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சன்னஸ்க
லவின் வழிகாட்டலில், திசாநாயக, நிசாந்தன், பிரசன்னா, விக்கிரமசிங்க, தர்மதாச ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழு, போதை மாத்திரைகளை கைப்பற்றியது.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை ஓமந்தை நகர்ப் பகுதியில் பொலிஸார் திடீரென வழிமறித்துச் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது ஆயிரத்து 670 போதை மாத்திரைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.