திருக்கேதீச்சரம் பகுதியில் இராணுவத்திடம் இருந்த 5 ஏக்கர் காணி கையளிப்பு..

ஆசிரியர் - Editor I
திருக்கேதீச்சரம் பகுதியில் இராணுவத்திடம் இருந்த 5 ஏக்கர் காணி கையளிப்பு..

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள், மன்னார் பிரதேச செயலாளரிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணி சுமார் 28 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணிகளும், திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி, மற்றும் வைத்திய சாலைக்கான காணிகளும் அடங்குவதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு