தனிமையில் வாழ்ந்தவர் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor I
தனிமையில் வாழ்ந்தவர் சடலமாக மீட்பு..

யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த யேசுதாசன் நிமல்ராஜ் (வயது 48) எனும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் திருமணம் முடிக்காத நிலையில் தனிமையில் வசித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானிக்கவில்லை.

இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை துர்நாற்றம் வீசியதை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த தகவலின் பிரகாரம் வீட்டிற்குள் சென்ற பொலிசார் வீட்டினை திறந்து பார்த்த போது , சடலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு