மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை உடன் செய்யுங்கள். வலி,வடக்கு மக்களுக்கு அறிவித்தல்..
வலிகாமம் வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் காணிகள் ஒருபகுதி விரைவில் விடுவிக்கப்படவுள்ளது.
விமான நிலைய ஓடுபாதையை அண்மித்த ஜே/238 கிராம சேவையாளர் பிரிவு கட்டுவன் காசிஅம்மன் கோயில் பக்கமுள்ள மக்களின் காணி
உரிமையாளர்கள் தங்கள் காணிஉறுதி பிரதி, அடையாள அட்டை பிரதி , குடும்ப பங்கீட்டு அட்டை பிரதி என்பவற்றை பைலில் வைத்து கட்டுவன்
ஊரங்குனை ஜே /238 கிராமசேவையாளரிடம் கொடுத்து பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வார ஆரம்பத்தில் முன்னர் இவற்றினை கொடுக்காது பதிந்தவர்களும் மீள இவற்றை கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை முதல் ஒரு வாத்துக்குள் ( கூடியவிரைவில்) பதிவினை மேற்கொள்ளுமாறு கிராமசேவையாளர் அறிவித்துள்ளார்.