மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை உடன் செய்யுங்கள். வலி,வடக்கு மக்களுக்கு அறிவித்தல்..

ஆசிரியர் - Editor I
மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை உடன் செய்யுங்கள். வலி,வடக்கு மக்களுக்கு அறிவித்தல்..

வலிகாமம் வடக்கில்  இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் காணிகள் ஒருபகுதி விரைவில்  விடுவிக்கப்படவுள்ளது.   

விமான நிலைய ஓடுபாதையை அண்மித்த  ஜே/238 கிராம சேவையாளர் பிரிவு கட்டுவன் காசிஅம்மன் கோயில்  பக்கமுள்ள மக்களின் காணி 

உரிமையாளர்கள் தங்கள் காணிஉறுதி பிரதி, அடையாள அட்டை பிரதி , குடும்ப பங்கீட்டு அட்டை பிரதி என்பவற்றை பைலில் வைத்து   கட்டுவன் 

ஊரங்குனை  ஜே /238 கிராமசேவையாளரிடம் கொடுத்து பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வார ஆரம்பத்தில் முன்னர் இவற்றினை கொடுக்காது பதிந்தவர்களும் மீள இவற்றை கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை முதல் ஒரு வாத்துக்குள் ( கூடியவிரைவில்)  பதிவினை மேற்கொள்ளுமாறு  கிராமசேவையாளர் அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு