ஓமந்தையில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞன் பேருந்து மோதி மரணம்!

ஆசிரியர் - Admin
ஓமந்தையில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞன் பேருந்து மோதி மரணம்!

வவுனியாவில் ஓமந்தைப் பகுதியில் இன்று காலை சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞன் பேருந்துடன் மோதி உயிரிழந்தார். 

ஓமந்தை- இறம்பைக்குளம் பகுதியில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த போது மாடு குறுக்காக வீதியின் நடுவே பாய்ந்துள்ளது.

இதன்போது குறித்த இளைஞன் பின்னால் வந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞர் யார்? எங்கிருந்து வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ? என்பது குறித்த விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

தற்போது இளைஞனின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு