SuperTopAds

இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சா பறிமுதல் - மூவர் கைது

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சா பறிமுதல் - மூவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தவிருப்பதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுமடம் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, அந்தப் பகுதியில் வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில்146 மூட்டையில் 30 இலட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 292 கிலோ கஞ்சா இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த பொலிஸார், அந்த லொறியில் பயணித்த ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சேர்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், சேகர் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.