SuperTopAds

ஹெதர் நைட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

ஆசிரியர் - Editor IV
ஹெதர் நைட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஹெதர் நைட், லோர்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2010-ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர், இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதன்படி ஹெதர் நைட் இதுவரையில் இங்கிலாந்து அணிக்காக 320 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் 2016 முதல் 2025 வரை இங்கிலாந்து அணியை வழிநடத்திய நிலையில், 2017ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தது அவரது கிரிக்கெட் வாழ்வின் மிக முக்கியமான தருணமாகும்.

சர்வதேச அரங்கில் 7,988 ஓட்டங்களையும் ஆறு சதங்களையும் குவித்துள்ள ஹெதர் நைட், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீராங்கனை ஆவார்.

இந்தநிலையில் "16 ஆண்டு காலப் பயணம் முடிவுக்கு வருவது வருத்தமாக இருந்தாலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் மைதானத்தில் எனது ஓய்வை அறிவிப்பது சரியாகத் தோன்றுகிறது," என ஹெதர் நைட் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இவரது மகத்தான பங்களிப்பைப் பாராட்டிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB), மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணிகள் என்றும் போற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது.