SuperTopAds

உரும்பிராயில் 74.5 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வீதி கையளிப்பு

ஆசிரியர் - Editor II
உரும்பிராயில் 74.5 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வீதி கையளிப்பு

யாழ்ப்பாணத்தில் கிராமிய பாதைகளைக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் மற்றும் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கற்பக பிள்ளையார் கோவில் வீதியானது 1.5 நீளமான வீதியாகும். இதன் புனரமைப்பு பணி 74.5 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது