சாவகச்சேரியில் சற்றுமுன் கோர விபத்து! டிப்பருக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்! இளைஞன் பரிதாபச் சாவு!

ஆசிரியர் - Admin
சாவகச்சேரியில் சற்றுமுன் கோர விபத்து! டிப்பருக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்! இளைஞன் பரிதாபச் சாவு!

தென்மராட்சி, மீசாலை மடத்தடி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் சுயநினைவின்றி மீட்கப்பட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த நவநீதராசா வரதன் (வயது – 23) என்ற இளைஞனே உயிரிழந்தார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்த நிலையில் பேருந்தின் முன்பகுதியில் புகுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு