யாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை!: ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

ஆசிரியர் - Admin
யாழிலிருந்து கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட நிலை!: ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

யாழ்ப்பாணத்திலிருந்து அரச உத்தியோகத்தர்களை கொழும்பு நோக்கி ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துடன் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல்(18) புத்தளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொள்வதற்காக யாழ். மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பெருந்தே இவ்வாறே விபத்தில் சிக்குண்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த உத்தியோகத்தரொருவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு