விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு!

ஆசிரியர் - Admin
விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் திருமதி விஜய கலா மகேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அரசியலமைப் பின் 157 (அ) பிரிவை மீறிய குற்றச் சாட்டின் கீழ் சுமார் 35 ஆண்டுக ளுக்குப் பின் முதன்முறையாக விஜயகலா மகேஸ்வரனுக்கு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார்.

அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத் தின் கீழ் கொண்டுவரப்படும் முதலாவது வழ க்கு இது என்பதால், எந்தவொரு நடைமுறை முன்னுதாரணங்களும் இல்லை. அதனால் இந்த வழக்கில் புதிய நடைமுறைகள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று சட்ட வல்லுந ர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தற்போது சாட்சியப்பதிவு நடைமுறைகள் இல்லை. எனவே சாட்சியங்களைப் பதிவு செய்து நெறி ப்படுத்துவதற்கான நடைமுறைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்பாடு செய்யவே ண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தண்ட னைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் நீதிவான் நீதிமன்றிலும், அரசியலமைப்பின் 157 (அ) பிரிவை மீறியதாக மேன்முறையீ ட்டு நீதிமன்றிலும் என இரண்டு குற்றச் சாட்டுகளை முன்வைப்பதற்கு சட்டமா அதி பர் தீர்மானித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சர்வ தேச உடன்படிக்கையின் சிவில் மற்றும் அர சியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் மூன்றா வது குற்றச்சாட்டு முன்வைக்கப்படவிருந்தது. எனினும் அதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அந்தத் தீர்மானம் கைவி டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக குற்றவியல் நடை முறைக் கோவை 120ஆம் பிரிவின் கீழ் நீத வான் நீதிமன்றில்- பொலிஸார் அடுத்த வாரம் வழக்குத் தொடுப்பார் என எதிர்பார்க்கப்படு கிறது என்று சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி நேற் றைய சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 157 (அ)

கூறுவது என்ன?

(1) இலங்கையின் ஆள்புலக்குள்ளாகத் தனி அரசொன்று அமைக்கப்படுவதற்கு ஆள் எவரும் இலங்கைக்குள் அல்லது இலங்கை க்கு வெளியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளித்தால், ஆக்கமளித்தல், ஊக்கமளித்தல், ஊக்குவித் தல், நிதியுதவுதல் அல்லது பரிந்துரைத்தல் ஆகாது.

(2) அரசியற் கட்சி அல்லது வேறு கழகம் அல்லது ஒருங்கமைப்பு எதுவும் இலங்கை யின் ஆள்புலத்துக்குள்ளாக தனி அரசொ ன்றை அமைத்தலை தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டிருக்கல் ஆகாது.

முதலாம் பந்தியின் ஏற்பாடுகளை மீறிச் செயற்படுகின்ற ஆளெவரும் குற்றப்பகர்வின் மீதும் சட்டத்தால் விதந்துரைக்கப்படக் கூடிய வாறான அத்தகைய நடைமுறைகளுக்கு இணங்கவும் ஆனவிளக்கத்தின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றால் குற்றத்தீர்ப்ப ளிக்கப்படுகின்றதன் மேல்,

ª ஏழு ஆண்டுகளுக்கு மேற்படாத ஒரு காலப்பகுதிக்கு குடியியல் தகுதியீனத்துக்கு உட்பட்டவராதல் வேண்டும்.

ªஅத்தகைய ஆளினதும் அவரது குடும் பத்தினதும் சீவனத்திற்கு அவசியமாக உள் ளவை என அத்தகைய நீதிமன்றின் கட்டளை ஒன்றினால் தீர்மானிக்கப்படுகின்ற ஆதன ங்கள் தவிர்ந்த அவரது அசைவற்றதும் அசைவுள்ளதுமான ஆதனங்களை இழத் தல் வேண்டும்.

ªஏழு ஆண்டுகளுக்கு மேற்படாத அத்த கைய காலப்பகுதிக்கு குடியியல் உரிமைகளு க்கு உரித்துடையவராதலாகாது.

ªஅவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பின் அந்தப் பதவியிலிருந்து அவரை நீக்குதல் என்று குறிப்பிடுகிறது.         

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு