SuperTopAds

வவுனியா - குறிசுட்டகுளத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் மரணம்

ஆசிரியர் - Editor II
வவுனியா - குறிசுட்டகுளத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் மரணம்

வவுனியா, குறிசுட்டகுளம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் உயிரிழந்துள்ளார் 

குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த  சேர்ந்த கஜேந்திரன் குகப்பிரியன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியிலுள்ள காளி கோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை இளைஞர் இயக்கிய போது அதற்குள் தவறி வீழ்ந்துஉயிரிந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.