இலங்கை வைத்தியசாலையில் இறந்த மனித உடலிற்கு நடந்த கொடூரம் !

ஆசிரியர் - Editor II
இலங்கை வைத்தியசாலையில் இறந்த மனித உடலிற்கு நடந்த கொடூரம் !

வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றை மரநாய் கடித்து சாப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் இவ்வாறு மரநாயினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த நபரின் சடலமே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது. சடலத்தின் முகம் உட்பட பல பகுதிகள் மரநாயினால் கடித்து சாப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் உயிரிழந்த நபரின் உறவினர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் சிலாபம் வைத்தியசாலையின் வைத்தியர் சிராஜிடம் வினவிய போது, சடலத்தை பொறுப்பேற்கும் போது சடலத்தை பரிசோதித்தே பெற்றிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது வைத்தியசாலையின் பிணவறையில் இடம்பெற்றிருந்தால், உறவினர்கள் அல்லது வேறு இடத்தில் இடம்பெற்றுள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்வதாக வைத்தியர் சிராஜ் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு