SuperTopAds

அத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும்

ஆசிரியர் - Editor II
அத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும்

வடமராட்சி அத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்பள்ளியில் இடம்பெற்றது.

முன்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கஜேந்தினி நிரஞ்ஜித்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி சித்திரபாட ஆசிரியர் சிவதர்சினி சந்திரராஜா கலந்துகொண்டார்.

முன்பள்ளி மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதை அடுத்து, விருந்தினர்கள்கண்காட்சி கூடத்தை திறந்து வைத்து, மாணவர்களின் சந்தையையும் ஆரம்பித்து வைத்தனர்.