வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயன்ற 88 பேர் நீர்கொழும்பு கடலில் படகுடன் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு முயன்ற, 88 பேர், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனார்.நீர்கொழும்பு மேற்கு கடலில், படகொன்றில் பயணித்து கொண்டிருந்த போதே, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே படகில் இருந்து கைது செய்யப்பட்டனர்.