“யாமிருக்கப் பயமேன்” பாணியில் சம்பந்தனுக்கு பதிலளித்த மோடி!

ஆசிரியர் - Admin
“யாமிருக்கப் பயமேன்” பாணியில் சம்பந்தனுக்கு பதிலளித்த மோடி!

எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சென்றுள்ள சர்வ கட்சி எம்.பிக்கள் குழு நேற்று இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தது. இதன்போதே சம்பந்தனிடம் மோடி மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பின் போது, இரா சம்பந்தன், “ வடக்கு - கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். இந்தியா எங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கை அபிவிருத்தி செய்வதில் இந்தியா பெரும் உதவிகளை வழங்கி வருகின்றது. அதற்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா அதிக அக்கறை செலுத்த வேண்டும். இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

புதிய அரசமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுகளுடன் அந்தத் தீர்வு அமைய வேண்டும். இலங்கையின் தற்போதைய ஆட்சியில் நாம் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுகின்ற போதிலும் அவற்றின் வேகம் போதாமல் இருக்கின்றது" என்று இந்தியப் பிரமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி,“எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றித் தீர்வைக் காண வேண்டும். இதனைக் கடந்த வருடம் மே மாதம் நான் இலங்கை வந்தபோதும் ஜனாதிபதி, பிரதமரிடம் எடுத்துக் கூறியிருந்தேன் என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு