SuperTopAds

முறிகண்டியில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவரை மோதித்தள்ளிய புகையிரதம்

ஆசிரியர் - Editor II
முறிகண்டியில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவரை மோதித்தள்ளிய புகையிரதம்

கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் அமைந்திருந்தவர் புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதியே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காணப்படாத நிலையில் ,  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.