புதிதாக பொறுப்பேற்ற யாழ்ப்பாணத்தின் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி - அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற கேணல் லங்கா அத்துக்கோரள யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபனை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்தரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் , பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் உடனிருந்தார்கள்.







