SuperTopAds

மருதனார்மடம் சந்தையை சுற்றி வளைத்து பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

ஆசிரியர் - Editor II
மருதனார்மடம் சந்தையை சுற்றி வளைத்து பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் , வட்டி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுன்னாகம் பொலிஸார் எச்சரித்துள்ளனர். 

மருதனார்மடம் சந்தை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இணைந்து சுன்னாக பொலிஸார் விசேட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு, சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர். 

அதன் போது, வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்