SuperTopAds

யாழில். இருந்து தமிழகத்திற்கு 6 கிலோ தங்கத்தை கடத்தியவர்களை கடலில் மடக்கிய கடற்படை

ஆசிரியர் - Editor II
யாழில். இருந்து தமிழகத்திற்கு 6 கிலோ தங்கத்தை கடத்தியவர்களை கடலில் மடக்கிய கடற்படை

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகளை மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.