"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்" - மனைவி சங்கீதா சர்ச்சை பற்றி பேசிய விஜய்!

நடிகர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா அளித்திருக்கும் விவாகரத்து மனு தான் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது. விஜய் தன்னை நீலாங்கரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை, விவாகரத்து முடியும் வரை அங்கு தங்க அனுமதி அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் சங்கீதா இன்று மனுதாக்கல் செய்து இருக்கிறார். மேலும் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் அதற்கு தகுந்த ஜீவனாம்சத்தை அளிக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று விஜய்யின் தவெக கட்சி சார்பில் நடந்த மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் விஜய் பேசினார். அப்போது சங்கீதா பிரச்சனை பற்றியும் பேசினார் விஜய்.
"இருக்கும் நிறைய பிரச்சனைகளுக்கு நடுவில் சமீபத்தில் சில பிரச்சனை வந்திருக்கிறது. அதற்காக நீங்கள் (ரசிகர்கள்) hurt ஆவதை பார்க்கிறேன். அதை பார்த்து எனக்கு hurt ஆகிறது."
"அதை எல்லாம் நான் பாத்துக்கிறேன். நாம மக்களோட பிரச்சனைகளை மட்டும் பாப்போம். அதெல்லாம் hurt ஆகாதீங்க. அவ்ளோ எல்லாம் worth கிடையாது" என கூறி இருக்கிறார் விஜய்.




