SuperTopAds

யாழில் மகளிர் தின நிகழ்வுகள்

ஆசிரியர் - Editor II
யாழில் மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்  யாழ் வீரசிங்கம்  மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு  அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தலைமையில்  இடம்பெற்றது.

மக்கள விளக்கினை பிரபல  ஈழத்து பெண்  பாடகி நடிகை  பார்வதி அம்மா ஏற்றிவைக்க அதனை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் கலந்து கொண்டார்.

சிறுவர் பெண்கள்   திட்டமிட்டு நசுக்கப்படுவதையும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் குரல் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டது