பாலைதீவு படகு விபத்து - உயிரிழந்தோரின் விபரம்

யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80) மற்றும் பிரான்ஸிஸ் (வயது 57) ஆகியோரின் சடலமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 13 வயது சிறுவன், 4 பெண்கள் 8 ஆண்கள் என 13 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




