SuperTopAds

இந்திய மீனவர்கள் 22 பேர் கைது

ஆசிரியர் - Editor II
இந்திய மீனவர்கள் 22 பேர் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களும்  , மன்னர் கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 10 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டள்ளனர் 

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அந்த அந்த பிரதேச கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.