SuperTopAds

வவுனியாவில் நண்பர்களுடன் குளத்தில் நீராட சென்ற உயர்தர மாணவன் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
வவுனியாவில் நண்பர்களுடன் குளத்தில் நீராட சென்ற உயர்தர மாணவன் உயிரிழப்பு

வவுனியா - மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

வவுனியா - கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று மாலை  நீராடச் சென்றுள்ளனர். 

இதன்போது மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் என்ற உயர்தர வகுப்பு மாணவராவார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.