மகிந்தவை அடுத்து கோத்தா! - விசாரணைக்குத் திட்டமிட்டுள்ள சிஐடி

ஆசிரியர் - Admin
மகிந்தவை அடுத்து கோத்தா! - விசாரணைக்குத் திட்டமிட்டுள்ள சிஐடி

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று வாக்குமூலத்தை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற இருப்பதாக தெரியவருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கீத் நொயார், தெஹிவளை வைத்தியா வீதியில், ஆயுத முனையில் கடத்திச் செல்லப்பட்ட போது, த நேஷன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லலித் அழககோன், அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொலைபேசியல் தொடர்புக்கொள்ள முயற்சித்த போதும் முடியாமல் போயுள்ளது. இதன் பின்னர், அன்றைய அரசாங்கத்தில் பொதுநிர்வாக அமைச்சராக இருந்த கரு ஜயசூரியவை ஒருவர் தொடர்புகொண்டு கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து கரு ஜயசூரிய உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்ட போதிலும் அவர் உறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எப்படியாவது ஜனாதிபதியிடம் பேச வேண்டும் என கரு ஜயசூரிய கூறியதை அடுத்து, மகிந்த ராஜபக்ச தொலைபேசி இணைப்புக்கு வந்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவிடம் பேசிய கரு ஜயசூரிய, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனை திட்டமிட்டு எவரோ செய்துள்ளதாகவும் கீத் நொயாருக்கு ஏதேனும் நடந்தால், தான் அரசாங்கத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

இதன் பின்னர் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, “கரு, குழம்பிக் கொள்ள வேண்டாம், அதனை நான் தேடிப்பார்க்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.இதன் பின்னர், மகிந்த ராஜபக்ச, அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அன்றைய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜனர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரன, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடியதன் பயனாக, கீத் நொயார், மல்வானை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு