ஐஸ் போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

பல்கலைக்கழக மாணவன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவனின் வீட்டினை சோதனையிட்ட போது வீட்டில் இருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மாணவனை கைது செய்துள்ளனர்.
கைதின் போது மூன்று கையடக்க தொலைபேசிகள் மற்றும் வங்கி புத்தகம் ஒன்று என்பதனையும் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட மாணவனை ,மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்






