நெல்லியடி, மாலி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!
நெல்லியடி, மாலி சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஒன்று, வாகனங்களை முந்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிரே வந்த மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கோப்பாய் மத்தி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார். விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.