மினி பஸ்ஸை அடித்து நொருக்கி தீவைக்க முயன்ற வாள்வெட்டுக் குழு!

ஆசிரியர் - Admin
மினி பஸ்ஸை அடித்து நொருக்கி தீவைக்க முயன்ற வாள்வெட்டுக் குழு!

அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்று இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டதுடன், அதனைத் தீக்கிரையாக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. 

அச்சுவேலி - யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர்.

பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வௌியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு