SuperTopAds

யாழில். இளம்பெண்ணை காணவில்லை - கணவன் பொலிஸில் முறைப்பாடு

ஆசிரியர் - Editor II
யாழில். இளம்பெண்ணை காணவில்லை - கணவன் பொலிஸில் முறைப்பாடு

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் தன்னுடன் வசித்து வந்த மனைவியை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த டினுசன் நிஸ்ரலா (வயது 25) எனும் பெண்ணையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 29ம் திகதி இரவு 11 மணி வரையில் வீட்டில் இருந்த தனது மனைவி அதன் பின் காணாமல் போயுள்ளார். என கணவன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.