SuperTopAds

யாழில் மோட்டார்சைக்கிள் மீது தாக்குதல்

ஆசிரியர் - Editor II
யாழில் மோட்டார்சைக்கிள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் கொண்ட குழு மானிப்பாய் பகுதியில் உள்ள கடையொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.