இந்தியாவில் சைவ சமய தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுடன் கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
இந்தியாவில் சைவ சமய தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுடன் கலந்துரையாடல்..

இந்தியாவில் சைவ சமய தலைமைத்துவ பயிற்சியை கற்றுக்கொண்டு வடமாகாணம் திரும்பிய சிவ தொண்டர்களை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் வவுனியாவில் சந்தித்து கலந்துரையாடினார். 

சைவ சமய ஒழுக்கங்கள் மற்றும் தலைமைத்துவ வழிகாட்டி பயிற்சி நெறிக்காக வடமாகாணத்தில் இருந்து சிவசேனை அமைப்பின் சிபாரிசில் சுமார் 8 பேர் பயிற்சிக்காக இந்தியா சென்றனர்.

இவ்வாறு சென்றவர்கள் தமது 3 மாதகால பயிற்சியை நிறைவு செய்து திரும்பி நிலையில் அவர்களை சிவ சேனை அமைப்பினர் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு