துவிச்சக்கர வண்டி திருடி மாட்டிய திருடன்! தப்பி ஓடி ஆற்றில் விழுந்தான், காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..

ஆசிரியர் - Editor I
துவிச்சக்கர வண்டி திருடி மாட்டிய திருடன்! தப்பி ஓடி ஆற்றில் விழுந்தான், காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..

துவிச்சக்கர வண்டி ஒன்றை திருட முயற்சித்ததை கண்டுபிடித்து பொதுமக்கள் துரத்தியதால் தப்பி ஓடி வாவியில் விழுந்த நபரை பொதுமக்களே காப்பாற்றியுள்ளனர். 

கொழும்பு - பத்தரமுல்ல ஜப்பான் - இலங்கை நட்புறவு வீதிக்கு அருகில் துவிச்சக்கர வண்டி ஒன்றை ஒருவர் திருட முயற்சிப்பதை பொதுமக்கள் அவதானித்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இந்நிலையில் சிலர் அவரை துரத்திச் சென்ற நிலையில் தியவன்ன ஓயாவில் குறித்த நபர் விழுந்துள்ளார். பின்னர் உடனடியாகசெயற்பட்ட சிலர் வாவிவிலிருந்து அவரை காப்பாற்றினர். 

எனினும், குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல கத்தி கூச்சலிட்டதாக கூறப்படுகின்றது. அவர் துவிச்சக்கர வண்டியொன்றை திருட முயற்சித்த நிலையில் அது தோல்வியடைந்தால் 

வாவியில் குதித்துள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது. பின்னர் சந்தேகநபர் சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு