தாய், தந்தையின் இறுதிக்கிரியை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 19 வயது மகளும் மரணம்..! மற்றொரு மகள் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
தாய், தந்தையின் இறுதிக்கிரியை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 19 வயது மகளும் மரணம்..! மற்றொரு மகள் வைத்தியசாலையில்..

வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளினால் ஏற்பட்டிருந்த விபத்தில் தந்தையும், தாயும் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மகளும் தந்தையின் இறுதி கிரிகைகள் நடைபெற்ற நேற்றய தினம் உயிரிழந்துள்ளார். 

ஹோமாகம மாகம்மன பகுதியில் வீடொன்றில் திடீர் தீ விபத்து இடம்பெற்றது. விபத்திற்கு காரணம் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளே என கூறப்பட்டிருந்த நிலையில் குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இதில் தாய் மற்றும் தந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மற்றைய மகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய யுவதி நேற்று மதியம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த யுவதியின் தாய், தந்தையின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு