தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேருக்கு பிணை! - படகோட்டிகளுக்கு விளக்கமறியல்

ஆசிரியர் - Admin
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேருக்கு பிணை! - படகோட்டிகளுக்கு விளக்கமறியல்

தமிழகத்தில் அகதிகளாக இருந்து படகு மூலம் தாயகம் திரும்பிய 4 பேர் மாதகல் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் மல்லாகம் நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

இதன்போது, தாயகம் திரும்பிய 4 பேருக்கும் பிணை அனுமதி வழங்கிய நீதிமன்றம், அவர்களைப் படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்கு அழைந்து வந்த படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு