13200 லீற்றர் பெற்றோலுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பவுசர்..! பெருமளவு பெற்றோல் நாசம்..
சுமார் 13200 லீற்றர் பெற்றோல் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்படும் போது பவுசரில் இருந்த பெருமளவு பெற்றோல் கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் தீயணைப்புப் பிரிவினரின் பெரும் முயற்சியின் பின்னர் பவுசர் மீண்டும் வீதிக்கு கொண்டுவரப்பட்டது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மழையுடனான காலநிலை காரணமாக வீதியில் இருந்து வழுக்கிச் சென்று
விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.